Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளபோனஸ் மற்றும் நிலுவை ஊதியம் தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி சாரம்மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட் டுத்துறை அலுவலகம் எதிரில் நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுகதெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
புதுச்சேரி அரசு பல்வேறு அறிவிப்பு களை வெளியிட்டு செயல்படுத்தாமல் உள்ளது. அந்தவகையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக போனஸ் வழங்குவதாக அறிவித்து நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. இதனையும், நிலுவை ஊதியத்தையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
கரோனா காலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் பணி பாராட்டும் வகையில் இருந்தது. அதற்காக சிறிய அளவில் கூட ஊக்கத்தொகை வழங்கவில்லை. இது சரியல்ல. அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை கூட அமல்படுத்தாமல் உள்ளது. அங்கன்வாடி ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நியாயமானதுதான். அங்கன்வாடி ஊழியர்கள் நடத்தும் அனைத்து விதமான போராட்டத்திலும் பங்கேற்று முழு ஆதரவையும் திமுக அளிக்கும் என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT