Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

மதுக்கடையை உடைத்து திருட்டு

புதுச்சேரி நூறடி சாலையில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. கடந்த 15-ம் தேதி இரவு கடையின் ஜன்னல் கதவை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த பணம், மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது திப்புராயப்பேட்டை நாய்பட்டி சந்து பகுதியைச் சேர்ந்த மனோகர் (58) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்த போலீஸார் கைது செய்த போலீஸார் திருமால் நகரில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x