Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

ஜாமீனில் வந்தவர் தற்கொலை

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பட்ட மங்கலம் கொங்காம்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் (35). இவர், சிங்கம்புணரி அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில், வடிவேல் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று மாதவராயன்பட்டி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். எஸ்.வி.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x