காரில் கடத்திச் சென்று குழந்தை விற்பனை?

காரில் கடத்திச் சென்று குழந்தை விற்பனை?
Updated on
1 min read

சென்னையைச் சேர்ந்தவர் ஹாஜிமுகமது. இவர், கடந்த 6 மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் வேலூர் அருகே பூங்கா நகரில் குடும்பத்தினருடன் தங்கி இருந்து, திருச்சியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி அமீனாபேகம்(26). இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அந்த குழந்தையை காணவில்லை என்றும், குழந்தையை விற்றுவிட்டதாகவும் புதுக்கோட்டை சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத் தது.

அதன்படி, குடும்பத்தினரை புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலக் குழும அலுவலகத்துக்கு வரவழைத்து, அதன் தலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி நேற்று விசாரணை மேற்கொண்டார்.

அதில், பூங்கா நகரைச் சேர்ந்த கண்ணன்(58) என்பவர், தனக்கு மயக்க மருந்து கொடுத்து, காரில் ஈரோட்டுக்கு கடத்திச் சென்று தனது குழந்தையை விற்றுவிட்டதாக அமீனாபேகம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தலைமறை வாகிய கண்ணனை விராலிமலை போலீஸார் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in