கரும்புக்கு நிலுவைத் தொகை வழங்காத சர்க்கரை ஆலை நிர்வாகம் உயர் அதிகாரிகளுக்கு தென்காசி ஆட்சியர் கடிதம்

கரும்புக்கு நிலுவைத் தொகை வழங்காத சர்க்கரை ஆலை நிர்வாகம்  உயர் அதிகாரிகளுக்கு தென்காசி  ஆட்சியர் கடிதம்
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814 மி.மீ. ஆகும். நவம்பர் மாதம் வரை இயல்பான மழை அளவு 738 மி.மீ. இந்த ஆண்டில் இதுவரை 671 மி.மீ. மழை பெய்துள்ளது. இது, இயல்பான அளவை விட குறைவு. நவம்பர் மாதத்தில் 208 மி.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் இதுவரை 206 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த 5 நாட்களாக பெய்த மழையால் அணைகளில் 80 சதவீத அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. 84 குளங்களில் ஒரு மாதத்துக்கு மேல் பாசனத்துக்கு கிடைக்கும் அளவுக்கு தண்ணீர் உள்ளது. கிணறுகளில் சராசரியாக 2 முதல் இரண்டரை மணி நேரத்துக்கு தினமும் பாசனத்துக்கு கிடைக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

விதைகள் ஆய்வு

விதைகளை ஆய்வு செய்ததில் 25 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. இதில் 22 மாதிரிகள் தொடர்பாக துறை ரீதியாகவும், மற்றவை குறித்து சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரங்களில் 322 மாதிரிகள் எடுக்கப்பட்டு, 296 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 16 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உரங்கள் இருப்பு

2016-17 மற்றும், 2017-18ம் ஆண்டுகளில் பயிர் காப்பீட்டுத் தொகையில் நிவாரணம் கிடைக்காத விவசாயிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in