Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
வேலூர்: கணியம்பாடியில் கற்போம், எழுதுவோம் இயக்கத்தின் சார்பில் தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு கற்போம், எழுதுவோம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், வட்டார அளவில் தேர்வாகியுள்ள தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், 27 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன துணை முதல்வர் மணி, கருத்தாளர்கள் கவிதா, அருணா, அருள்மொழி ஆகியோர் தன்னார்வ ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். வேலூர் மாவட்ட எஸ்.எஸ்.ஏ. திட்ட உதவி அலுவலர் ஜோதீஸ்வர பிள்ளை தன்னார்வலர்களுக்கு ஊக்க உரையாற்றினார். முடிவில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருண் நன்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT