Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
திருவண்ணாமலை: ஆரணியில் பட்டு நூல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் சுந்தரம் தெருவில் வசிப்பவர் மதியழகன். இவர், அதே பகுதியில் பட்டு ஜரிகை நூல் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு, ஆரணி, சைதாப்பேட்டையில் வசிக்கும் கந்தசாமி என்பவர் அறிமுகமாகி உள்ளார். அதன் அடிப்படையில் அவர், கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடையில் இருந்த பட்டு நூல்களை கந்தசாமி அடிக்கடி திருடிச் சென்றுள்ளது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மதியழகன் கொடுத்த புகாரின் பேரில், ஆரணி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT