Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
திருவண்ணாமலை: தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள பெருங்காட்டூர் கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் ராமநாதன் தலைமை தாங்கினார். 1,276 கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகையை நீக்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார். இதையடுத்து அவர், கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு நினைவு பரிவு வழங்கிப் பாராட்டினார். கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.
முகாமில் இசிஜி, ஸ்கேன், இருதய நோய், மகப்பேறு மருத்துவம், பால்வினை நோய், எலும்பு மூட்டு, புற்றுநோய், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இதில், ஒன்றியக் குழுத் தலைவர் ஜீவா மூர்த்தி, ஒன்றிய அதிமுக செயலாளர் வெள்ளையன், வீட்டு வசதி சங்கத் தலைவர் பொய்யாமொழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT