Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கார்த்திகை மாதத்தில் தினசரி 900 பக்தர்கள் வீதம் ஆன்லைனில் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன்னதாக www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு 100 பக்தர்கள் வீதம் ஒன்பது மணி நேரத்துக்கு 900 பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். தரிசன நேரத்துக்கு இரண்டு மணி நேரம் முன்னதாக வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

முன்பதிவு டிக்கெட்டில் உள்ள தரிசன நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மலை மீது ஏற பக்தர்கள் அனுமதி அளிக்கப்படும். கோயிலில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு யாரும் தங்கியிருக்க அனுமதியில்லை. கோயிலில் அர்ச்சனை எதுவும் செய்யப்படாது என்பதால் பக்தர்கள் யாரும் தேங்காய், பூ, பழங்கள் உள்ளிட்ட எதையும் கொண்டுவரக்கூடாது.

கோயிலில் தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் எதுவும் வழங்கப்படாது. வியாபாரிகள் சாலையோரங்களில் கடைகள் வைக்கவும், அன்னதானம் வழங்கவும் அனுமதியில்லை. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x