Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

ரூ.20 லட்சம் மோசடி புகார் மதுரையில் தாய், மகன் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரா. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் செண்பகவள்ளி (53), அவரது மகன் சுரேஷ் (32). இவர்களது உறவினர் முத்துலட்சுமி. இம்மூவரும் சந்திராவிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கினர். ஆனால், அதை திருப்பித் தரவில்லை. மேலும் பணம் தர மறுத்து சந்திராவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சந்திரா ஜெய்ஹிந்த்புரம் போலீஸில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், செண்பகவள்ளி, சுரேஷை கைது செய்தனர். முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x