நாமக்கல்லில் கடத்தப்பட்ட லாரி உரிமையாளர் திண்டுக்கல்லில் மீட்பு

நாமக்கல்லில் கடத்தப்பட்ட லாரி உரிமையாளர் திண்டுக்கல்லில் மீட்பு
Updated on
1 min read

நாமக்கல் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர் பொன்னுச்சாமி(59). கடந்த 18-ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்த பொன்னுச்சாமியை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இதுகுறித்து பொன்னுச்சாமி மனைவி நிர்மலா நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே நள்ளிரவில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸார் சென்று கொண்டிருந்தனர். அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

நாமக்கல்லில் இருந்து பொன்னுச்சாமியை அவர்கள் கடத்தி வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பொன்னுச்சாமியை போலீஸார் மீட்டனர்.

கடத்தலில் தொடர்புடைய ஈரோடு சிவகிரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(20), கும்படைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன்(37), அரவிந்த்(19), கவின்குமார்(26), தட்டான்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவா(20) ஆகியோரைப் பிடித்த ரோந்து போலீஸார், அவர்களை நாமக்கல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in