Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

சேலத்தில் நாளை திமுக-வின் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் நாளை (21-ம் தேதி) ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் காணொலி காட்சி மூலம் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதுதொடர்பாக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் நாளை (21-ம் தேதி) பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பேசுகிறார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சேலம் மத்திய மாவட்ட ஒன்றிய, பகுதி, பேரூர், கோட்டம், ஊராட்சி பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். திமுக-வினர் பங்கேற்க சேலம் மத்திய மாவட்டத்தில் 18 திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மத்திய மாவட்ட பகுதியில் உள்ள சேலம் மாநகரம், ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் 300 இடங்களில் பெரிய தொலைக்காட்சி பெட்டிகள் வைத்து பொதுமக்களும், திமுக-வினரும் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x