1,475 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்

1,475 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ளது. நாளை (21-ம் தேதி), நாளை மறுநாள் (22-ம் தேதி), 12.12.2020 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1,475 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் வாக்காளர் பட்டியல்களில் தங்களது பெயரை சேர்க்க படிவம் -6, வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள நபர்களில் இறந்தவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பெயரை நீக்க படிவம் -7, பெயர், முகவரி மற்றும் புகைப்பட விவரங்களை திருத்தம் செய்ய படிவம்-8 மற்றும் அதே தொகுதிக்குள் இடமாற்றம் செய்திட படிவம் 8-ஏ ஆகியவற்றை வழங்கலாம்.

பொதுமக்கள் தங்கள் முகவரிக்குட் பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை மனுக்களை அளிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in