Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
திருவண்ணாமலை: 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கேங்மேனாக தேர்வு பெற்றுள்ளவர்களை மின்வாரியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதுபோல் ஐடிஐ படித்த 2,900 பேரை கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். படித்த இளைஞர்களை கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சுந்தர் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் நந்தன் உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்டச் செயலாளர் அன்பரசன், மாவட்டப் பொருளாளர் சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் முருகன், பிரகாஷ், சுகுமார், ராஜா, கண்ணதாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT