Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்க தேர்வான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் பாராட்டு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத் துவம் படிக்க தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் ஆகியோர் பாராட்டு தெரிவித்து ஊக்கத்தொகையை வழங்கினர்.

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டந்தோறும் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க தேர்வாகி வருகின்றனர். அவர் களுக்கான பட்டியல் வெளி யிப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த முல்லை கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து நடத்துநரான ராஜேந்திரன் என்பவரின் மகள் ஷர்மிளா (17), நிம்மியம்பட்டு அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்து வந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற ‘நீட்' தேர்வில் கலந்து கொண்டு 279 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றார்.

‘நீட்' தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருந்தாலும் மருத்துவ படிப்புக்கான இடம் ஷர்மிளாவுக்கு கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், தமிழக அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டின்படி ஷர்மிளாவின் கனவு நனவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, மருத்துவம் படிப் பதற்காக ஷர்மிளா தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

இதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரிய கண்ணாலப் பட்டி அரசுப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் கோவிந்தராஜ் மற்றும் மணிமேகலை, புதுப்பேட்டை அரசுப்பள்ளியைச் சேர்ந்த சபீதா மற்றும் சுஜி, நந்தம் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஹரீதா மற்றும் ஜீவிகா ஆகியோர் ‘நீட்' தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசு அறிவித்த இட ஒதுக் கீட்டின் கீழ் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளதாக மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வாணியம்பாடி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் முன்னிலை வகித்து, ‘நீட்' தேர்வில் வெற்றிபெற்று மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியுள்ள மாணவர் களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத் தொகையை வழங்கினார்.

ஊக்கத்தொகை பெற்ற மாணவர்கள் தங்களது மருத்து வப்படிப்புக்கான கனவை நன வாக்கிய தமிழக அரசுக்கும், முதல்வர் பழனிசாமிக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏக்கள் சம்பத்குமார் (வாணியம்பாடி) கே.ஜி.ரமேஷ் (திருப்பத்தூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x