லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவதி

லட்சுமி விலாஸ் வங்கி  வாடிக்கையாளர்கள் அவதி
Updated on
1 min read

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற் குள்ளாகியுள்ள லட்சுமிவிலாஸ் வங்கியில் சர்வர் பழுதால், ஈரோட்டில் உள்ள வங்கிக் கிளைகளில் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

ஈரோடு மாவட்டத்தில் மீனாட்சி சுந்தரனார் வீதி, மூலப்பாளையம், திண்டல் உட்பட மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் லட்சுமி விலாஸ் வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கியின் ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி யடைந்த வாடிக்கை யாளர்கள் வங்கிகளின் முன் நேற்று திரண்டனர்.

வாடிக்கையாளரகள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 25 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சர்வர் பழுது காரணமாக அந்த தொகையையும் வாடிக்கையாளர்களால் எடுக்க முடியவில்லை. வாடிக்கை யாளர்களின் சந்தேகங்களுக்கு வங்கி ஊழியர்கள் விளக்கமளித்து சமாதானப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in