Published : 19 Nov 2020 03:15 AM
Last Updated : 19 Nov 2020 03:15 AM

கனமழையால் அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியது

நிரம்பி வழியும் அரும்பாவூர் பெரிய ஏரி நீரில் குளித்து மகிழும் மக்கள்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான அரும்பாவூர் பெரிய ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பச்சமலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்கிருந்து பெருக்கெடுத்து வந்த மழைநீரால், பெரம்பலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான அரும்பாவூர் பெரிய ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது.

இந்த ஏரியின் முழு கொள்ளளவு 52.63 மில்லியன் கன அடி ஆகும். இந்த ஏரியின் ஆயக்கட்டு பாசன பரப்பளவு 565 ஏக்கர். அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியதைத் தொடர்ந்து, இங்கிருந்து உபரி நீர் சித்தேரிக்கு செல்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் பாண்டகப்பாடி ஏரி 80 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளது. நெற்குணம், வயலூர், கீழப்பெரம்பலூர், அரும்பாவூர் சித்தேரி, கை. களத்தூர் ஏரி, பெரம்பலூர் சின்ன ஏரி ஆகிய 6 ஏரிகள் சுமார் 50 சதவீதமும், வெண்பாவூர் ஏரி, துறைமங்கலம் ஏரி, லாடபுரம் பெரிய ஏரி ஆகிய 3 ஏரிகளில் 25 சதவீ தமும் தண்ணீர் நிரம்பியுள்ளது.

கரூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இம் மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

கரூர் மாவட்டம்: அணைப் பாளையம் 98, க.பரமத்தி 54.40, மாயனூர் 54, கரூர் 41, கிருஷ் ணராயபுரம் 39.60, பாலவிடுதி 36, மைலம்பட்டி 33, கடவூர் 32, அரவக்குறிச்சி 28, குளித்தலை 24, பஞ்சப்பட்டி 10.60, தோகைமலை 8.20.

புதுக்கோட்டை மாவட்டம்: அரிமளம் 93, ஆயிங்குடி 75, அறந்தாங்கி 74, கீழாநிலை 71, நாகுடி 67, மணமேல்குடி 58, ஆலங்குடி 49, ஆவுடையார் கோவில் 48, குடுமியான்மலை 46, புதுக்கோட்டை44, திருமயம், மீமிசல் 42, கறம்பக்குடி, மழையூர் 23, உடையாளிப்பட்டி, காரையூர் தலா 22, விராலிமலை, பொன்னமராவதி தலா 21, இலுப்பூர், பெருங்களூர் தலா 15, கந்தர்வக்கோட்டை14, கீரனூர் 11, ஆதனக்கோட்டை 6, அன்னவாசல் 5.

திருச்சி மாவட்டம்: பொன்னணி யாறு அணை 36.40, மருங்காபுரி 35.40, திருச்சி ஜங்ஷன் 35, பொன்மலை 33.40, முசிறி 32, லால்குடி 28, விமான நிலையம் 27.50, திருச்சி நகரம் 27.30, நந்தியாறு தலைப்பு 26.80, தேவிமங்கலம் 25, மணப்பாறை 23.60, வாத்தலை அணைக்கட்டு 22.20, கல்லக்குடி 21.20, கோவில்பட்டி 20.20, தாத்தையங்கார்பேட்டை 20, நவலூர் குட்டப்பட்டு 19.60, புள்ளம்பாடி 16.20, துவாக்குடி 12.

பெரம்பலூர் மாவட்டம்: செட்டிக்குளம் 20, பாடாலூர் 18, அகரம் சீகூர் 6, லப்பைக்குடிகாடு, பெரம்பலூர், தழுதாழை தலா 10, கிருஷ்ணாபுரம் 6, வி.களத்தூர் 2, வேப்பந்தட்டை 5.

பெரம்பலூரை அடுத்த வெண்பா வூரைச் சேர்ந்த ரங்காயி(60) என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவரும், வேப்பந்தட்டையைச் சேர்ந்த அழகுதுரை (50) என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டின் சுவரும் மழையின் காரணமாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x