உதவி ஆய்வாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

உதவி ஆய்வாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 14 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு முக்கிய குற்ற வழக்குகளில் புலன் விசாரணை செய்வது தொடர்பான புத்தாக்கப் பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சி.சக்திகணேசன் தலைமை வகித்துப் பேசினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா முன்னிலை வகித்தார். பயிற்சிக் கூட்டத்தில், முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை எப்படி கைது செய்வது, தடயங்களை சேகரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பு வரும் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாமக்கல் டிஎஸ்பி காந்தி, நாமக்கல் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in