Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM

பெரம்பலூரில் காவல்துறையினர் அணிவகுப்பு

பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறையினரின் அணிவகுப்பு பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது.

பெரம்பலூர், துறைமங்கலம் பகுதியில் உள்ள 3 சாலையில் அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த் திபன் கொடியசைத்து தொடங்கி வைத்து, அணிவகுப்பிலும் பங்கேற்றார்.

துறைமங்கலம், திருச்சி சாலை வழியாக பாலக்கரை பகுதியில் அணிவகுப்பு நிறைவடைந்தது. இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிராஜ், காவல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அணிவகுப்பின் முடிவில், கலவர தடுப்பு ஒத்திகை, போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை ஒத்திகை உள்ளிட்டவற்றை அதி விரைவு படை வீரர்கள் செய்து காண்பித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கூறும்போது, “பெரம்பலூர் மாவட்டத்தில் ரவுடியிசம், போதைப்பொருட்கள் விற்பனை, பண மோசடி உள்ளிட்ட குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x