செங்கோட்டை அருகே ஆட்சியர் ஆய்வு

செங்கோட்டை அருகே ஆட்சியர் ஆய்வு
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர், திருவெற்றியூர் பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடியவை என கண்டறியப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் இந்த பகுதிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை நீர் சூழ்ந்தால் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். செங்கோட்டை வட்டாட்சியர் ரோஷன் பேகம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in