மேல்மலையனூரில் சொத்துக்காக தாயை கொன்ற மகன் கைது

மேல்மலையனூரில்  சொத்துக்காக தாயை கொன்ற மகன் கைது
Updated on
1 min read

மேல்மலையனூரை அடுத்த தாழங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(72)-ஜக்குபாய்(65) தம்பதியினருக்கு 4 பெண், 2 ஆண் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர். தம்பதியருக்கு 4 ஏக்கர் விவசாய உள்ளது. அதில் மூத்த மகன் ஜீவானந்தம், இரண்டாவது மகன் அயோத்தி ஆகியோருக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் பிரித்துக் கொடுத்துள்ளனர். ஆனால், விலை போகாத நிலத்தை தனக்கு பிரித்து கொடுத்துள்ளதாக அயோத்தி அவ்வவ்போது தாய் வீட்டிற்கு சென்று தாய் ஜக்குபாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன் மதுபோதையில் தாய் வீட்டிற்கு அயோத்தி சென்றார். அப்போது சொத்து தொடர்பாக தாயிடம் பிரச்சினை செய்துள்ளார். திடீரென உருட்டுக் கட்டையால் தாயை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜக்குபாயை உடனிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஜக்குபாய் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுதொடர்பாக ராமச்சந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அயோத்தியை நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in