பட்டாசு கடையில் விபத்து சிறுவன் உயிரிழப்பு

பட்டாசு கடையில் விபத்து சிறுவன் உயிரிழப்பு
Updated on
1 min read

கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் அப்பகுதியில் அரிசிக் கடை நடத்திவருகிறார். அவரது கடையையொட்டி அவரது மகன் கிருஷ்ண சாமி தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்து வந்தார். பட்டாசு கடையினுள் நேற்று முன்தினம் கிருஷ்ணசாமியின் மகன் தர்ஷித் (2), பக்கத்துவீட்டைச் சேர்ந்த பழனிவேலுவின் மகள்கள் நிவேதா (7), வர்ஷா (6) ஆகியோர் அமர்ந்திருந்தனர். அப் போது, எதிர்வீட்டில் பட்டாசு வெடித்த போது, அந்த பட்டாசு தீப்பொறி, அரிசிக் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது விழுந்து தீப்பிடித்தது. கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் சிறார்கள் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் நிவேதா மற்றும் வர்ஷாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கும், தர்ஷீத்தை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். இதில் சிறுவன் தர்ஷித் நேற்று முன்தினம் உயிரிழந்தான். வரஞ்சரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in