கல்வராயன்மலையில் இரு மகள்களுடன் கர்ப்பிணி தற்கொலை

கல்வராயன்மலையில் இரு மகள்களுடன் கர்ப்பிணி தற்கொலை
Updated on
1 min read

கல்வராயன்மலையில் அண்ண னின் மனைவியை தம்பி திரும ணம் செய்ய உறவினர்கள் வற் புறுத்தியுள்ளனர். இதனால் தனது இரு மகள்களுடன் கர்ப்பிணி தாய் நேற்று முன்தினம் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கீழரத்துக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (30). இவரது மனைவி ரேவதி(25). இவர்களுக்கு புஷ்பா (5), யமுனா (2) என 2 மகள்கள் இருந்தனர். 6 மாத கர்ப்பிணியாக இருந்த ரேவதி தனது இரு மகள்களுடன் கடந்த 13-ம் தேதி மாயமானார். அதேஊரில் உள்ள ஒரு கிணற்றில், ரேவதி மற்றும் அவரது இரு மகள்களின் உடல்களும் நேற்று முன்தினம் கிடந்தன. தகவலறிந்த கச்சிராயப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டனர்.

இதுதொடர்பாக கரியாலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஈஸ்வரனின் மூத்த சகோதரர் மகேந்திரன் என்பவர் ஆந்திராவுக்கு மரம் வெட்ட சென்ற போது, கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மகேந்திரனின் மனைவி அல மேலுவை, ஈஸ்வரனுக்கு 2-வது திருமணம் செய்ய, உறவினர்கள் வற்புறுத்தி வந்தனர். இதனால் ரேவதிக்கும், ஈஸ்வரனுக்கும் தகராறு எழுந்துள்ளது.

இதில் மனமுடைந்த ரேவதி தனது 2 மகள்களுடன் தற் கொலை செய்து இருக்கலாம் என விசாரணையில் தெரியவந் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in