சிவலிங்கத்துக்கு 1,008 ருத்ராட்சம் அணிவித்து வழிபாடு

சிவலிங்கத்துக்கு 1,008 ருத்ராட்சம் அணிவித்து வழிபாடு
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் கீழப்பழு வூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஒப்பனைநாயகி உடனாய மறவனேசுவரன் கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு, தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் 1,008 ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், சிவனடியாகர்களால் தமிழ் மரபுப்படி மந்திரங்கள் கூறப்பட்டு, எண்ணெய் தீபம் ஏற்றப்பட்டு, கற்பூரம் காண்பித்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவலிங்கத்தை வழிபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in