Published : 16 Nov 2020 03:14 AM
Last Updated : 16 Nov 2020 03:14 AM

திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் பரவலாக மழை

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக லேசான முதல் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் பலத்த மழையும், தீபாவளியன்று லேசான மழையும் பெய்தது.

நவ.14-ம் தேதி தீபாவளியன்று காலை நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 12.59 மி.மீ மழை பதிவானது.

அன்று காலை வரை மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

திருச்சி மாநகர் 45, ஜங்ஷன் 44, பொன்மலை 35, நவலூர் குட்டப்பட்டு 26, புள்ளம்பாடி 17.40, லால்குடி 17, பொன்னணியாறு அணை பகுதி 15.60, மருங்காபுரி 15.20. தொடர்ந்து, நேற்று காலை நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீட்டரில்): வாத்தலை அணைக் கட்டு பகுதி 8.2, துறையூர், தேவிமங்கலம் தலா 5, முசிறி 3, மணப்பாறை 2.2, பொன்னணியாறு அணை பகுதி 1.1.

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும், நேற்று முன்தினமும் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு(மி.மீட்டரில்):

பஞ்சப்பட்டி 12, அரவக்குறிச்சி 10, அணைப்பாளையம் 7, தோகை மலை 5, கரூர் 4.40, கிருஷ்ணரா யபுரம் மற்றும் மாயனூர் தலா 4, குளித்தலை 3.

அரியலூர் மாவட்டத்தில் திரு மானூர், அரியலூர், உடையார் பாளையம், தா.பழூர், ஜெயங் கொண்டம், ஆண்டிமடம், செந் துறை, பொய்யாதநல்லூர், மீன்சு ருட்டி, திருமழபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. பகலில் அவ்வப்போது வெயிலும் காணப் பட்டது. மழையின் காரணமாக சாலையோரங்களில் மழைநீர் ஓடியது.

இந்த மழையின் காரண மாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x