இன்று குடிநீர் விநியோகம் ரத்து

இன்று குடிநீர் விநியோகம் ரத்து
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருமலைக்கொழுந்துபுரம் நீரேற்று நிலையத்திலிருந்து வரும் சிமென்ட் பம்பிங் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் இன்று (16-ம் தேதி) 15, 16-வது வார்டுக்கு உட்பட்ட சாந்திநகர், சாந்திநகர் போலீஸ்காலனி பகுதிகள், ரகுமத் நகர், கிழக்கு பகுதி வார்டு எண் 18, டிஆர்ஓ மேல்நிலைத்தொட்டி மூலம் விநியோகிக்கப்படும் பகுதிகள், வார்டு எண் 20 மகாராஜ நகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in