Published : 16 Nov 2020 03:14 AM
Last Updated : 16 Nov 2020 03:14 AM

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 9-வது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் 8 மாத சம்பள தொகையை வழங்க வலியுறுத்தல்

நடப்பாண்டுக்கான கரும்பு அரவையை உடனடியாக தொடங்க வேண்டுமென வலியுறுத்தி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 9-வது நாளாக நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த கேத் தாண்டிப்பட்டி பகுதியில் ‘திருப்பத் தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை’ இயங்கி வருகிறது. இங்கு, 250-க் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கரும்பு அரவை நடைபெறாது என ஆலை நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கடந்த 7-ம் தேதி முதல் உள்ளிருப் புப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் அன்பழகன் தலைமையில் நேற்று 9-வது நாளாக 230-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அன்பழகன் கூறும்போது, ‘‘கடந்த 2019-ம் ஆண்டு மழையின்மையால் கரும்பு வரத்து குறைந்துவிட்டது எனக்கூறி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை நடைபெறாது என ஆலை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்துள்ளது. கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 35 ஆயிரம் டன் கரும்புகளை அரவை செய்ய விவசாயிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இதுதவிர 40 ஆயிரம் டன் கரும்புகளை அரவை செய்ய தயாராக உள்ளனர். இது போக, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து 50 ஆயிரம் டன் கரும்பும், கடலாடி, கலசப்பாக்கம், கேட்டவரப்பாளை யம் ஆகிய பகுதிகளில் இருந்து 40 ஆயிரம் டன் என கிட்டத்தட்ட சுமார் 1 லட்சம் டன் கரும்புகளை திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை செய்ய ஒப்புதல் கேட்டு விவசாயிகள் ஆலை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஆனால், ஆலை நிர்வாகம் இதையெல்லாம் ஏற்காமல் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அரவைக்காக அனுப்பி வைக்கிறது. நடப்பாண் டில் கரும்பு அரவையை ஆலை நிர்வாகம் உடனடியாக தொடங்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு தர வேண்டிய 8 மாத சம்பளத் தொகையை தாமதமின்றி வழங்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்புப்போராட்டத்தை கைவிடமாட்டோம்’’ என்றார்.

சர்க்கரை ஆலை தொழிலாளர் தீபாவளி பண்டிகையையும் புறக் கணித்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வீட்டுக்கு செல்லாமல் உள்ளிருப்புப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருவதால் அவர்களின் குடும்பத்தார் தொழி லாளர்களை காண தொழிற் சாலைக்கு நேற்று வந்தனர்.

அப்போது, தொழிற்சாலை நிர்வாக மேலாளரிடம் உள்ளிருப்புப் போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனக் கூறி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

மனுவை பெற்ற ஆலை நிர்வாகத்தினர், விரைவில் சுமூக முடிவு எடுப்பதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x