மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தீபாவளி பரிசு

சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் வீடு வீடாகச் சென்று மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறும் ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள்.
சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் வீடு வீடாகச் சென்று மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறும் ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள்.
Updated on
1 min read

தீபாவளியை முன்னிட்டு சேத்தி யாத்தோப்பு அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்றனர். சீருடை, நோட்டு புத்தகம், இனிப்புகள் கொண்ட பெட்டகத்தை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

‘மாணவர்கள் கவனமுடன் பட்டாசு வெடிக்க வேண்டும். அரசு வலியுறுத்தும் கரோனா விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கவேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in