

தீபாவளிப் பண்டிகையின்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம், ஆசனூர், அந்தியூரை அடுத்த பர்கூர், கோபியை அடுத்த தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியையொட்டியுள்ள இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அடிக்கடி இருந்து வருகிறது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், வனவிலங்கு களை அச்சப்படுத்தும் வகையில் பட்டாசுவெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையுடன் வெடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவைகள் சரணாலயம்
ஆட்சியர் எச்சரிக்கை
குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்கவேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப் படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும், என அறிவுறுத்தியுள்ளார்.