பெரம்பலூர் மாவட்ட அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சேவை மையம்

பெரம்பலூர் மாவட்ட அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சேவை மையம்
Updated on
1 min read

ரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் நிலையங்களில் ஆதார் திருத்த சேவை மையம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக்கொள்ளும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் தலைமை அஞ்சல் நிலையம், செட்டிக்குளம், குன்னம், லப்பைக்குடிக்காடு, பாடாலூர், வி.களத்தூர், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை ஆகிய துணை அஞ்சல் நிலையங்களில் ஆதார் திருத்த சேவை மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in