Published : 13 Nov 2020 03:17 AM
Last Updated : 13 Nov 2020 03:17 AM

50 சதவீத மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு திட்டம்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கோழி வளர்ப்பு திட்டங்களில் பயன்பெறாதவர்கள் 50 சதவீதம் மானியத்தில் நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தில் பயன்பெறலாம் என ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2020-21-ன் படி கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா 5 அலகுகள் வீதம் மொத்தம் 35 அலகுகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் முதற் கட்டமாக 17 பயனாளிகளுக்கு நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதில் தேர்வாகும் பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் 1,000 கோழிக் குஞ்சுகள், கோழி தீவனம், முட்டை அடைகாத்தல் கருவி வழங்கப்படும். கால்நடை பராமரிப்புத் துறையின் கோழி வளர்ப்பு திட்டத்தில் கடந்த ஆண்டில் பயனடையாதவர்கள் நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்துக்காக அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x