திருச்செங்கோட்டில் அதிகாலையில் நகைக்கடை பூட்டை உடைத்து 45 பவுன், 10 கிலோ வெள்ளி திருட்டு

திருச்செங்கோட்டில் அதிகாலையில் நகைக்கடை பூட்டை உடைத்து   45 பவுன், 10 கிலோ வெள்ளி திருட்டு
Updated on
1 min read

நகைக்கடை பூட்டை உடைத்து 45 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை திருச்செங்கோடு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்செங்கோடு பாவடித் தெருவைச் சேர்ந்த வர் முத்துசாமி (40). இவர் திருச் செங்கோடு பெரியமாரியம்மன் கோயில் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் கடை திறந்திருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். கடைக்குள் 5 பேர் நகைகளை திருடியதைப் பார்த்தவர்கள் கூச்சல் எழுப்பினர்.

இதையடுத்து கடைக்குள் இருந்தவர்கள் 2 இருசக்கரவாகனங்களில் தப்பினர். தகவல் அறிந்த கடை உரிமையாளர் முத்துசாமி கடைக்கு வந்து பார்த்தபோது 45 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவான மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in