தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்
Updated on
1 min read

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று போராட்டம் நடத்தினர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். புதிய 3 வேளாண் சட்டங்களையும், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும், புதிய கல்விக் கொள்கையையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் திருப்பூர் சுடலை உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in