Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM

திண்டுக்கல்லில் தண்டவாளத்தில் கற்கள் வைத்த 2 சிறுவர்கள் கைது

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் சிமென்ட் கற்கள் வைத்த இரு சிறுவர் களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

மேட்டுப்பட்டி ரயில் தண்டவாளத்தில் கடந்த 5-ம் தேதி சிமென்ட் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. அவ்வழியாக வந்த சரக்கு ரயில் கற்கள் மீது மோதியது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பின்னர் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து ரயில் ஓட்டுநர்கள் அளித்த புகாரின்பேரில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரணை நடத்தியதில் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் சிமென்ட் சிலாப் கற்களை தண்டவாளத்தில் வைத்தது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x