20 சதவீதம் போனஸ் கோரி பிரச்சாரம்

20 சதவீதம் போனஸ் கோரி பிரச்சாரம்

Published on

20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கக்கோரி குமாரபாளையத்தில் ஏஐசிசிடியு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். விசைத்தறி கூடத்தில் தார் ஓட்டுபவர்கள், தறி ஓட்டுபவர், பாவு ஓட்டுபவர், நூல் போடுபவர்கள், மேஸ்திரிகள், மலுக்கு அச்சு பிணைக்கும் தொழிலாளர்கள் உள்பட அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் தரவேண்டும், என்பது உள்ளிட்டவை பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வரும் 18-ல் மாவட்ட அளவிலான ஏஐசிசிடியு மாநாடு நடைபெற உள்ளது, எனவும் பிரச்சாரத்தில் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் மாணிக்கம், கதிரவன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in