குமாரபாளையம் அரசுக் கல்லூரியில் சேர 16-ம் தேதி கடைசி

குமாரபாளையம்  அரசுக் கல்லூரியில்   சேர 16-ம் தேதி கடைசி
Updated on
1 min read

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 16-ம் தேதி கடைசி நாள், என கல்லூரி முதல்வர் ரகுபதி (பொறுப்பு) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21-ம் கல்வியாண்டில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ.,வணிக நிர்வாகவியல் ஆகிய இளநிலை பாடப் பிரிவுகள் மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளான எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.எஸ்சி. கணினி அறிவியல், கணிதம், எம்.காம்., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை வரும் 16-ம் தேதி வரை நடைபெறும். கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவியர் உடனடியாக அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து விண்ணப்பம் பெற்று சேர்க்கை செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in