சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் சேர்க்கை தேதி நீட்டிப்பு

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில்  சேர்க்கை தேதி நீட்டிப்பு
Updated on
1 min read

சங்கரன்கோவிலில் தொடங்கப் பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. (ஆங்கில இலக்கியம்), பி.ஏ. (சமூகவியல்), பி.காம்., பி.எஸ்சி. (புள்ளியியல்), பி.எஸ்சி. (கணினி அறிவியல்) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

இன்னும் நிரப்பப்படாத காலியிடங்கள் உள்ளன. தற்போது மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு துணைத் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர் சேர்க்கைக்கான தேதி வருகிற 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in