Published : 07 Nov 2020 03:15 AM
Last Updated : 07 Nov 2020 03:15 AM

போளூர் அருகே மருத்துவ முகாம்

தி.மலை மாவட்டம் போளூர் அடுத்த முக்குரும்பை கிராமத்தில் நேற்று முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் பாரதி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார். போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். முகாமில், மார்பக புற்று நோய், கர்பப்பை மற்றும் வாய்புற்று நோய், சர்க்கரை நோய் உட்பட பல்வேறு நோய் களுக்கு பரிசோதனை செய்யப் பட்டது. முகாமில் 921 பேர் பங்கேற்றனர். மேலும், 54 கர்ப்பிணி பெண்களை பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x