Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

கோயிலில் திருட முயற்சி

தி.மலை மாவட்டம் செய்யாறு நகரம் சின்னத் தெருவில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோயில் வழிபாடு முடிந்து நேற்று முன்தினம் இரவு மூடப் பட்டது.

இந்நிலையில், கோயில் முன்புஉள்ள உண்டியலை பெயர்க்கும் முயற்சியில் மர்ம நபர்கள் நேற்று அதிகாலையில் ஈடுபட்டுள்ளனர். தரையில் புதைக்கப்பட்டிருந்த உண்டியலின் பூட்டுகளை இரும்பு ராடுகள் மூலம் உடைத்துள்ளனர். சத்தம்கேட்டு பொதுமக்கள் வருவதை உணர்ந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இது குறித்து கோயில் நிர்வாகி சங்கர் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x