தீபாவளி பண்டிகைக்காக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகைக்காக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை முன்னிட்டு, கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

வரும் 14-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு பேருந்துகள் வரும் 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in