தென்காசி நகராட்சி அலுவலகம் முற்றுகை

தென்காசி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
தென்காசி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated on
1 min read

தென்காசி நகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும், இது தொடர்பாக பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். அவர்களிடம் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in