குழந்தைகள் சிறப்பு மருத்துவ முகாம் தென்காசியில் நாளை நடக்கிறது

குழந்தைகள் சிறப்பு மருத்துவ முகாம் தென்காசியில் நாளை நடக்கிறது
Updated on
1 min read

தென்காசி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நாளை (6-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தென்காசி ரயில் நிலையம் அருகில் உள்ள எம்கேவிகே உயர்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

முகாமில் குழந்தைகளுக்கு இருதய நோய்கள், பிளவு அன்னம்மற்றும் வாய், எலும்பு குறைபாடுகள், நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த முகாமில் கலந்துகொள்ளும் குழந்தைகளின் தேவைக்கேற்ப பரிசோதனை முதல் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சைவரை முழுவதும் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்று, தென்காசி ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in