தூத்துக்குடி, குமரியில் அதிகரிக்கும் கரோனா

தூத்துக்குடி, குமரியில் அதிகரிக்கும் கரோனா
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

திருநெல்வேலி மாநகராட்சி- 9, அம்பாசமுத்திரம்- 1, நாங்குநேரி- 1, பாளையங்கோட்டை- 1, வள்ளியூர்- 3, சேரன்மகாதேவி- 2.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 42 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 15,198 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று 39 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 14,644 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 424 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 7,868 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 7,653 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 60 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 15,069 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 45 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை மொத்தம் 14,578 பேர் குணமடைந் துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in