திருமாணிக்குழியில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

திருமாணிக்குழியில்  விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
Updated on
1 min read

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ், மண் வள அட்டை பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு ரசாயன உரம் வழங்கும் நிகழ்ச்சி திருமாணிக்குழி கிராமத்தில் உள்ள திருவந்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கடலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் தலைமையில் விவசாயிகளுக்கு, நெல் நுண்ணூட்ட கலவை உரம் மற்றும் திரவ உயிர் உரங்கள் வழங்கப்பட்டன. கடலூர் வேளாண் அலுவலர் சுகன்யா, கூட்டுறவு சங்க இயக்குநர் ராஜேந்திரன், சங்க செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in