தாய், மாற்றுத்திறனாளி மகன் உயிரிழப்பு குமாரபாளையம் போலீஸார் விசாரணை

தாய், மாற்றுத்திறனாளி மகன் உயிரிழப்பு குமாரபாளையம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

குமாரபாளையம் அருகே தாய், மனநலம் பாதித்த மகன் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

குமாரபாளையம் அய்யன் தோட்டத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (33). இவர் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்வி (28) என்ற மனைவி, கவுசிக் (7) என்ற மகனும் உள்ளனர். கவுசிக் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

மகனின் நிலையை நினைத்து செல்வி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்குச் சென்ற தன் கணவருக்கு போன் செய்த செல்வி, மகன் மூச்சு, பேச்சு இல்லாமல் உள்ளார் எனக் கூறியுள்ளார். கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது செல்வி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். மேலும், மகன் படுக்கையில் இறந்து கிடந்தார்.

இதுதொடர்பாக குமாரபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொன்றுவிட்டு செல்வி தற்கொலை செய்திருக்கலாம், என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in