Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது

சங்கராபுரத்தை அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(28). இவர் மீது சங்கராபுரம் காவல்நிலையத்தில் சாராயம் காய்ச்சுதல், விற்றல் மற்றும் கடத்துதல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள் ளார். இவர் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியாவுல் ஹக் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா

குண்டர் சட்டத்தில் கோவிந்தனை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம் நேற்று கோவிந்தனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x