பெரம்பலூர் புதிய ஆட்சியராக பி..வெங்கட பிரியா பதவியேற்பு

பி..வெங்கட பிரியா
பி..வெங்கட பிரியா
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த வே.சாந்தா அண்மையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பனியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பட்டு வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்த பி..வெங்கட பிரியா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, பெரம்ப லூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், மாவட்டத்தின் 14-வது ஆட்சியராக பி..வெங்கட பிரியா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள், விவசாய சங்கங்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், ஆட்சியர் வெங்கட பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்து அரசு நலத் திட்டங்களின் பயன்களையும் மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன். மாவட் டத்தின் முக்கியத் தேவைகளை அறிந்து, அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவேன். பொதுமக்களின் பிரச்சினைக ளுக்கு உடனுக்குடன் தீர்வு காண முயற்சி மேற்கொள்வேன். பொதுமக்கள் எளிதில் அணுகும் ஆட்சியராக இருப்பேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in