Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

தியாகதுருகம் அருகே தொழிலாளி கொலையில் பெண் கைது

கள்ளக்குறிச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் மணடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பழனிச்சாமி (40). இவர்கள்ளக்குறிச்சி ரோடு மாமந்தூர் பகுதியில் உள்ளஇனிப்புக் கடையில் வேலை செய்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் ஏரிக்கரையில் பழனிச்சாமி சடலமாகக் கிடந்தார். தியாகதுருகம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், உளுந்தூர்பேட்டை அடுத்த இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி கோமதிக்கு (45) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே சுற்றித்தி ரிந்த கோமதியை போலீஸார் நேற்று கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில்,கோமதிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதும், தன்னிடம் பழகும் ஆண்களுக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கிக் கொடுத்து, அவர்களிடமிருந்து உடமைகளை பறித்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர் என்பதும் தெரியவந்தது. அந்த வகையில் பழனிச்சாமிக்கும் மது வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு மயக்கம் ஏற்படாததால், அவரை தனது புடவையால் இறுக்கி கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதையடுத்து கோமதி மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார் நேற்று அவரை சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x