ராப்பூசலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ராப்பூசலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ராப்பூசலில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடை பெற்றது. மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். மாவட்டத்தில் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை (காரீப் பருவத் தில்) 1.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விழாவில், இலுப்பூர் கோட் டாட்சியர் (பொ) முருகேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக்கழக மண்டல மேலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in