செய்யாறு அருகே இரும்பு ராடுகளை திருடிய 2 பேர் கைது

செய்யாறு அருகே இரும்பு ராடுகளை திருடிய 2 பேர் கைது
Updated on
1 min read

செய்யாறு அருகே போர்வெல் லாரியில் இருந்த 6 இரும்பு ராடுகளை திருடிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் கிராமத்தில் வசிப்பவர் போர்வெல் உரிமை யாளர் பத்திராஜிலு(39). இவர், தனது போர்வெல் லாரியை, பெருங்கட்டூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன் தினம் நிறுத்தி வைத்திருந்தார்.. அந்த சமயத்தில் லாரியில் இருந்த 6 இரும்பு ராடுகளை (பூமியில் துளையிட பயன்படுத்தப்படும் டிரில் ராடுகள்) திருடிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பிடித்து மோரணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், இருவரும், தூசி கிராமத்தில் வசிக்கும் தமிழ்செல்வன், முரளி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மோரணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும்,அவர் களிடம் இருந்து ரூ.1.20 லட்சம் மதிப்பிலான இரும்பு ராடுகளை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in